தவேப வேளாண் இணைய தளம் ::அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அடிக்கடி கேட்கும் கேள்விகள்   
வளங்குன்றா வேளாண்மை என்றால் என்ன?

 வளங்குன்றா வேளாண்மை  தற்போதைய உற்பத்திக்குக் குறைவில்லாமல் அதிக உணவு, தீவனம், அல்லது ஆற்றல் பயிர் விளைச்சலை வழங்க முடியும். பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களுக்கு மாற்றாக விவசாயிகள் ஒரு நிலையான அணுகுமுறையை எடுக்கிறார்கள். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் பயிர் சுழற்சி மற்றும் விவசாய அமைப்பின் மற்ற மாற்றங்களை பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக, மண் செறிவூட்டல், ஆரோக்கியமான தாவரங்களை உருவாக்கிவிடும், அது நோய் எதிர்ப்புத் தன்மையைப் பெறும். கவர் பயிர்கள் அரிப்பைத் தடுத்தல் மற்றும் களைகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் இயற்கை விலங்குகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவி செய்கிறது. இதன் விளைவாக விவசாயிகள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல் மூலம் பண சேமிப்பு மற்றும் சூழலை பாதுகாக்கிறது.

  1. வளங்குன்றா வேளாண்மையின் பொருள் விளக்கம் என்ன?

சூழலைப் பாதுகாக்கும் போது தற்போதைய பண்ணை வளங்களை அதிகப்படுத்தல் மற்றும் மறுசுழற்சி மூலம் லாபத்தை உறுதிப்படுத்தலுக்கு வளங்குன்றா வேளாண்மை முயற்சிக்கின்றது.  உள்ளூர் சமூகத்துடன் ஒரு பரஸ்பர நன்மை பயக்கும் உறவு மூலம் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கு, வளங்குன்றா உத்திகள் விவசாயிகளை ஊக்கப்படுத்துகிறது.

  1. அங்கக வேளாண்மை வளங்குன்றா வேளாண்மையின் மற்றொரு பெயரா?

இல்லை. இல்லை அது ஒரு தவறான கருத்தாகும். அது உண்மை என்றாலும் வளங்குன்றா வேளாண்மையின் குடையின் கீழ் வரும். அது வளங்குன்றா வேளாண்மையைப் பின்பற்றாமல், எப்பொழுதும் அங்கக வேளாண்மையைப் பின்பற்றுகிறது.

  1. எப்படி அங்கக வேளாண்மை வளங்குன்றா வேளாண்மையிலிருந்து வேறுபடுகிறது?

கரிம விவசாயம், எந்தெந்த  செயற்கை கூட்டு ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயிர்கள் மீது பயன்படுத்த முடியும் என கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. கனிம உரங்கள் அல்லது கூடுதல் பயன்பாடு அனுமதிக்க முடியாது மண் அல்லது நுண்ணுயிர் கொல்லிகள் பயன்படுத்தப்பட வேண்டும் விலங்கு உற்பத்தி செய்ய வேண்டும். மண்ணில் கனிம உரங்கள் அல்லது அதன் கூடுதல் பயன்பாட்டை அனுமதிக்க முடியாது, விலங்கு உற்பத்தியில் நுண்ணுயிர்க் கொல்லிகளைப் பயன்படுத்த முடியாது. பயிர்களை இயற்கை வழிப்பயிராக சந்தைப்படுத்துவதற்கு முன்பு பயிர் வயல்கள் மூன்று வருடங்கள் வரை இரசாயன உரங்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். வளங்குன்றா வேளாண்மை முறைக்கு இந்தக் கட்டுப்பாடுகள் தேவையில்லை.

  1. வளங்குன்றா வேளாண்மையில் யார் பங்கு பெற வேண்டும்?

பண்ணை வளங்களின் மேம்படுத்தப்பட்ட மேலாண்மையின் செலவுகளைக் குறைக்க மற்றும் விவசாய லாபத்தை மேம்படுத்த விருப்பம் உள்ள முயற்சி செய்பவர்கள். எல்லோரும் வளங்குன்றா வேளாண்மையில் பங்களிக்கவும் மற்றும் தங்கள் சொந்த நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு தங்கள் கருத்தை மதிப்பு மிக்கதாக செய்யும் முயற்சிக்கும் வரவேற்கப் படுகிறார்கள். உள்ளூர் சமூகத்துடன் இணைந்து சூழலில் இணக்கமான லாபம் தரும் விவசாய பொருட்களை உற்பத்தி செய்வதற்கான தார்மீக கடமையைத் தவிர வேறு ஒரு குறிப்பிட்ட நிலையான தேவைகள் இல்லை.

  1. விவசாய பண்ணை ஒரு நவீன அணுகுமுறையை வளங்குன்றா வேளாண்மையில் பயன்படுத்துமா?

வளங்குன்றா வேளாண்மையின் பொருள் குறைந்த விளைச்சல் அல்லது ஏழை விவசாயிகளுக்கான முறை என்பது அல்ல. இது  19-ம் நூற்றாண்டின் வகைப்படுத்துதல் முறையாகும். மாறாக, வளங்குன்றா வேளாண்மை, தற்போதைய வேளாண் சாதனைகள் எந்த விவசாயத்தை நம்பியிருக்கும் வளங்களின் மதிப்பு குறையாமல் அதிக லாபம் மற்றும் பண்ணை லாபத்தைப் பராமரித்தல் போன்ற சிக்கலான அணுகுமுறையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். பயிர் சுழற்சி வேலைகள் பூச்சிக் கட்டுப்பாட்டைக் குறைத்தல் செலவுகள் போலவே, உயர் விளைச்சல் ரகங்களின் செலவுகளும் இருக்கிறது, அது போலவே, நேற்றைய குறைந்த விளைச்சல் தரும் இரகங்களின் செலவுகளும் இருக்கிறது. விவசாயத்தை வளங்குன்றாமல் செய்வது என்பது, பயிர்களைத்தின்னும் பூச்சிகளைக் கவனிப்பது என்று பொருளல்ல. அது உயர் தரமான மண், பயிர் சுழற்சி, மற்றும் நன்மை பயக்கும் பூச்சிகளைப் பயன்படுத்தி ஒரு முற்றிலும் மாறுபட்ட வழியில் பூச்சிக் கட்டுப்பாட்டை நெருங்குதலாகும்.
நாம் நமது விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளைக் குறைவாக மதிப்பிட்டால், சிறந்த இன்றைய உற்பத்தியை ஏற்றுக்கொண்டால், மிகவும் மாசுபட்டுள்ள விவசாயத்தைத் தான் நாம் இந்த நாட்டில் செய்ய முடியும். அதிக உற்பத்தியை மேம்படுத்தும் சவாலில், விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு வளங்களைக் கொடுக்க வேண்டும்.

  1. வளங்குன்றா வேளாண்மைக்கு பூங்காக்கள் மற்றும் வனப்பகுதிகளுக்கு  ஒதுக்கிய நிலம் தேவைப்படுமா?
    வளங்குன்றா வேளாண்மை எதிர்ப்பாளர்கள் அது குறைவாக மகசூலை உற்பத்தி செய்வதனால் பூங்கா மற்றும் சரணாலயத்திற்கு ஒதுக்கிய நிலங்களை மீட்டு விவசாயத்தின் அடிப்படை உணவு மற்றும் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்த வேண்டும். ஆனால் அப்படி செய்யத் தேவையில்லை. ஆனால் வளங்குன்றா வேளாண்மை குறைவான மகசூலைத் தருவதில்லை. தொழில்துறை விவசாயத்தை விட நீண்ட கால முறைக்கு அதிக திறன் அவசியம் இல்லை, எனவே பயிர்களின் குறைந்த அளவு உற்பத்திக்கு அதே அளவு நிலம் போதுமானது. நிலையான விவசாயத்தை இயற்கை பகுதிகளில் மாற்றத் தேவையில்லை நிலங்களை நமக்கு தேவைப்படும் பூங்காக்கள் மற்றும் பொழுது போக்குக்காக ஒதுக்கியது, நமது விவசாயத்தைப் பாதிக்காது. இந்த நாட்டில் பூங்காக்களின் அத்து மீறல் என்பது வெறுமனே ஒரு கருத்து.  பிரச்சனை என்னவென்றால், அச்சுறுத்தல் குறிப்பாக நகரங்களை சுற்றியிருக்கும் வளர்ச்சி, விவசாயத்தில் முன்னிறுத்துகிறது. நகரப்பகுதிகள், விவசாயத்திற்குக் கிடைக்காமல் செய்த பண்ணை நிலங்களை ஏப்பமிடுவது தொடர்கிறது. நகரங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், விவசாய பயன்பாட்டுக்குரிய பண்ணை நிலங்களைப் பாதுகாக்கவும் ஐக்கிய அமெரிக்கா சில கொள்கைகளை வகுத்துள்ளது. இது குறிப்பாக முக்கியமானது, நீண்ட தூர வேளாண் நிலங்களிலிருந்து வரும் உணவுப்பொருட்களை விட, உள்ளூர் வேளாண் நிலங்களிலிருந்து வரும் உணவுப்பயிர்கள் மக்களைச் சென்றடைவது தான் குறிக்கோளாக இருக்கிறது.
  2. உயிர் எரி சக்திப் பயிர்களை நிலையாக வளரச்செய்ய முடியுமா?

நிலையான வழியில் வளர்ச்சியடைந்தால், உயிர்எரிசக்தியை, மின்சாரம், எரிபொருள் இரண்டிலும் சில இடர்ப்பாடுகளுடன் நிலையாக உற்பத்தி செய்வதை விட எண்ணெய், நிலக்கரி மற்றும் அணுசக்தித் தொழில்நுட்பங்களில் உற்பத்தி செய்வதில் நிறைய இடர்ப்பாடுகள் உள்ளது. உயிர்சக்திப் பயிர்கள் மற்ற சக்தி நிலையங்களிலிருந்து வெளிவிடப்படும் வெப்பத்தை எடுத்துக்கொண்டு உலக காலநிலை மாற்றத்தில் பங்கு கொள்கிறது. ஆனால் உயிர்சக்தி முன்னேற்றத்தினுடைய வேகமான உலக விரிவாக்கம் விரும்பத்தகாத சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார விளைவுகள் உணவு, நார்ப்பயிர்கள், தொழில் மூலப்பொருட்களின் உற்பத்தியின் உலகத்திறனைக் குறைக்க வாய்ப்புள்ளது. யூ.சி.எஸ். வழிகாட்டும் கொள்கைகளின் தொகுப்பை வைத்திருக்கிறது அது நாட்டுக்கு உயிர்சக்தி முன்னேற்றத்தில் ஒரு முறையில் உதவி செய்கிறது; வாய்ப்புகளை அதிகப்படுத்தியும் மற்றும் இந்த புதுப்பிக்கும் வளங்களுடன் இணைந்துள்ள சவால்களைக் கண்டு பிடிக்க உதவுகிறது.
9.வளங்குன்றா வேளாண்மை அறிவியல் பூர்வமானதா?
வளங்குன்றா வேளாண்மை உறுதியாக அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. பயிர்கள், பூச்சிகள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகளுக்கிடையே பலதரப்பட்ட நெருங்கிய தொடர்பு, விலையுயர்ந்த தொழில்நுட்பத் தேவைகளான பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் தேவையைத் தவிர்க்கிறது. இந்த மாதிரியான அறிவு நிறைய அறிவியல் துறைகளில்  மேற்கொண்ட ஆராய்ச்சியைப் பொறுத்து இருக்கிறது; அதில் பூச்சியியல், களை அறிவியல், உழவியல் துறைகள் அடங்கியுள்ளது. அறிவியல் விஞ்ஞானிகள் இந்தக்களத்தில் ஒன்றாகப் பணியாற்றும் பொழுது, வேளாண்மை ஒருமுறை எனப் புரிந்து கொள்வார்கள். ஒரு நல்ல உதாரணமாக, மெய்னே உருளைக்கிழங்கு சுற்றுச் சூழலியல் திட்டம் இருக்கிறது,  பெரிய அளவிலான, நடந்து கொண்டிருக்கும் பல கட்டுப்பாட்டுக் கல்வி சூழ்நிலையியல் மற்றும் பொருளாதாரவியல் மற்றும் தாவர உயிரியலாளர்கள் பொருளாதார ரீதியான உருளைக்கிழங்கு உற்பத்தியைப் புரிந்து கொள்ள மெய்னே உருளைக்கிழங்கு சுற்றுச்சூழல் முறைத் திட்டத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றினார்கள். உருளைக்கிழங்கு வளர்ப்பவர்களில், யார் பூச்சிக்கொல்லிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் அல்லது இரசாயனப் பூச்சிக்கொல்லிகள் அல்லது உரத்தினைப் பயன்படுத்துவதைக் குறைத்தலுக்கு ஆலோசனை தேவைப்படுகிறவர்களுக்கு மதிப்பு மிக்க தகவலைக் கொடுத்தல் வேண்டும். மண், பூச்சிகள் மற்றும் உருளைக்கிழங்கு இவற்றை வைத்து ஆராய்ச்சி செய்தல் ஒரு நீண்ட கால தொகுப்பாகும். பல முக்கிய குறிக்கோள்கள், உதாரணமாக, மண்வளம், தாவரத்தின் வளரும் தன்மை, பூச்சிக் கொல்லிகளின் தன்மைகள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகள். களைகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும்  பல்வேறு காலநிலை மற்றும் அழுத்த நிலைகளின் கீழ் உருளைக்கிழங்கு மகசூலினுடைய கலந்துரையாடல்கள் மேல் விரிவான மற்றும் பயனுள்ள தகவலின் பரந்த அளவு மூலம் திட்டம் உருவாகிறது. (ஆல்போர்டு, ஆர்.ஏ. 1996. சூழ்நிலையியல், பொருளாதாரம் மற்றும் உருளைக்கிழங்கின் பயிரிடும் திட்டத்தின் மேலாண்மை: மெய்னே உருளைக்கிழங்கு சுற்றுச்சூழல் முறைத் திட்டத்தின் முதல் நான்கு வருடங்களின் விவரம் மெய்னே வேளாண்மை மற்றும் வன சோதனை நிலையம், மெய்னே பல்கலைக்கழகம், புல்லடின் 843.)
வளங்குன்றா வேளாண்மை, வலுவான அறிவியல் ஆதாரத்தைச் சார்ந்திருக்கிறது, இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. தொழில் முறை வேளாண்மை சம்பந்தமான, வெவ்வேறு விதமான கலவையான வேளாண்மை முறையில் அறிவியல் விஞ்ஞானிகள் இன்னும் தெரியாத இணைப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. ஆனாலும் வேதியியலாளர்கள் பூச்சிக்கொல்லிகளை உருவாக்குகிறார்கள், வளங்குன்றா வேளாண்மைக்கு வளமான மண்களில் உள்ள வெளிக்கொண்டு வராத ஆச்சரியங்களைக் கண்டுபிடிக்க மண் அறிவியலாளர்கள் தேவைப்படுகிறார்கள். உயிரியலாளர்கள் பயிர்கள் களைக்கொல்லி களைத் தாங்கி வளரும் தன்மை கொண்டவைகளாக உருவாக்க வேண்டும். வளங்குன்றா வேளாண்மைக்கு அறுவடை செய்யவும், பயிர்களைப் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்தவும் புது வழிகளைக் கண்டுபிடிக்கவும் அதிகமாகக் களை சுற்றுச்சூழலியலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
10.வளங்குன்றா வேளாண்மை வேலை செய்கிறதா?
இந்த கேள்விக்கு பதிலளிப்பது நிறைய காரணங்களால் சிக்கலானது. வளங்குன்றா வேளாண்மையின் பொருள் மாறக்கூடியது மற்றும் பல வகையான வழக்கங்களை சுட்டிக்காட்ட முடியும் ஆனால், ரசாயனத்தைப் பயன்படுத்துவதைத் தடுத்தலைச் சார்ந்திருக்கிறது.மேலும், வளங்குன்றா முறைகள் வளர்ச்சிக்கு நேரம் எடுத்துக்கொள்ளும். மண்ணின் தரத்தையும், முக்கியத்துவத்தையும் நிலை நிறுத்துவதற்கு பாரம்பரிய வேளாண்முறை வருடக்கணக்கில் எடுத்துக்கொள்ளும். பாரம்பரிய வேளாண்மையைப் பயன்படுத்திப் பயிர் வளர்த்தலில் மண்ணிற்கு ரசாயன உரங்களைப் பயன்படுத்தி ஊட்டமளித்தல் மற்றும் அவைகள் தரமற்ற நிலத்தில் வளர்வதை வளங்குன்றா வேளாண்மை தக்க வைக்கும் என்பது தவறான கருத்தாகும். ஒப்பீடு வெவ்வேறு விதமான பருவநிலை மற்றும் காலநிலையில் நீண்ட காலத்திற்கு செய்வதுதான் மதிப்புள்ளதாக இருக்கும். தவிர, ஒப்பீட்டின் முடிவு, வளங்குன்றா அணுகுமுறை அதிக உற்பத்தி மற்றும் பொருளாதார ரீதியாகத் தகுதி உடையது.(Northwest Area Foundation, A better row to hoe: The economic, environmental and social impact of sustainable agriculture, 1994.) 
ஒப்பீட்டைக் கணக்கில் எடுக்கும் போது, ஒன்றைக்கணக்கில் வைத்துக்கொள்வது முக்கியமானது, மகசூல் குறைவானால், விவசாயிகளின் குறைந்த லாபத்திற்கு வளங்குன்றா வேளாண்மையைக் காரணம் சொல்லக்கூடாது. குறைந்த மகசூல் கிடைத்தால் முடிவு, உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்குக் குறைந்த செலவு அல்லது சக்தி, உண்மையில் வயலில் லாபம் அதிகரித்துத் தான் கிடைக்கும். வளங்குன்றா முறையின் பண்ணைக்குத் தேவையான வெளிப் பொருட்கள் லாபத்தைக் கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. மேலும், இயற்கைச் சீற்றங்களால் வேளாண்மைக்குத் தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. பாரம்பரிய வேளாண்மையின் எதிர்பார்க்க முடியாத விளைவுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் போது வளங்குன்றா உற்பத்தி முறையில் அதை வலிமையாக்குகிறது. (P. Faeth et al., Paying the Farm Bill: U.S. agricultural policy and the transition to sustainable agriculture, World Resources Institute, 1991.)
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013